பதிவு செய்த நாள்
22
மே
2018
12:05
திருப்பூர்;திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், சோமாசிமாற நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.சோழநாட்டில், திருவம்பரில் பிறந்தவர், சோமாசிநாயனார். மிகச்சிறந்த சிவ பக்தராகவும், சிவனடியார்களுக்கு திருவமுது படைப்பதை தனது கடமையாக செய்து வந்தவர். திருவாரூரில், ஐம்புல சேட்டைகளையும், காமம் உள்ளிட்ட அறுவடை குற்றங்களையும் நீக்கி, ஆரூரார் திருவடி பெற்று, எம்பெருமான் திருவடி அடைந்தார். சோமாசி மாற நாயனார் குருபூஜை, திருப்பூர் அர்த்தசாம சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று நடந்தது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.விழாவையொட்டி, சிவனடியார்களுக்கு அன்னம் பாலிக்கப்பட்டது.