விருதுநகர் : விருதுநகர் பராசக்திவெயிலுகந்தம்மன்கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இரவு 8:30 மணிக்கு கொடியேற்றப்பட்டு இரவு 10:00 மணிக்கு வெள்ளிசப்பரத்தில் அம்மன் நகர் வலம் நடந்தது. ஜூன் 6 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் அம்மன் நகர் வலம் நடைபெறும். மே 29 ல் பொங்கல்விழா, 30 ல் கயிறுகுத்துதல் , அக்னிசட்டி, 31 ல் தேரோட்டம் நடக்க உள்ளது.