Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி ... வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விழா துவங்கியது வேணுகோபால சுவாமி கோயில் வைகாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு
எழுத்தின் அளவு:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசோழபுரம் கோவிலில் ஆய்வு

பதிவு செய்த நாள்

23 மே
2018
11:05

கள்ளக்குறிச்சி; வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ணன் சிலை மாயமானது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில், ௮௦௦ ஆண்டுகள் பழமைவாய்ந்த, வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அறநிலையத்துறை ஆய்வாளர் சரவணன் ஆய்வு செய்தார். அப்போது, கோவிலில் இருந்த, அரை அடி உயரம் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் ஐம்பொன் சிலை, கடந்த ௨ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனது குறித்து, தெய்வீகன், 53, என்பவர் தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக, அறநிலையத்துறை ஆய்வாளர் சரவணன், தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக, திருச்சி டி.எஸ்.பி., சந்திரசேகரன், துாத்துக்குடி இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். கோவில் அர்ச்சகர், முன்னாள் அர்ச்சகர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், வீரசோழபுரத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்தும் சிலைகள் மாயமானது குறிப்பிடத் தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar