பதிவு செய்த நாள்
23
மே
2018
12:05
ஓசூர்: கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கெலமங்கலம் பகுதியில் உள்ள பட்டாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. கோவிலுக்கு சொந்தமாக, தேர் இல்லாததால், கடந்த ஆண்டு, டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள, தர்மராயர் சுவாமி கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, தேரோட்டம் நடந்தது. இந்தாண்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த, தொட்டநாகமங்கலம் பகுதியில் உள்ள, மத்தூரம்மா கோவிலில் இருந்து, தேர் கொண்டு வரப்பட்டு, தேர்க்கட்டும் பணிகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு, தளி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், தேர் கமிட்டியினர் மற்றும் ஒன்பது ஊர் கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர், பின் நிலையை அடைந்தது. வாழைப்பழம், நிலக்கடலை போன்றவற்றை, தேரின் மீது வீசி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு, சிறப்பு பூஜை, அபி?ஷகம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடந்தது. கெலமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.