பதிவு செய்த நாள்
23
மே
2018
12:05
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சற்குரு கணபதி சுவாமி ஆசிரமத்தில் குருபூஜை நடந்தது. தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில், குடிமைப்பொருள் அலுவலகம் எதிரில், சற்குரு மகான் கணபதி சுவாமிகள் ஆசிரமம் உள்ளது. இங்கு, கணபதி சுவாமிகளின் 17ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், குரு தீபஆராதனையுடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, கீதா முத்தையன் குழுவினரின் திருவாசகமேடை, 5:15 மணிக்கு அச்சுதானந்த சுவாமிகளின் கீர்த்தனைகள், அருளுரை, திருவமுத பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்துடன் குருபூஜை துவங்கியது. 8:30 மணிக்கு யாகசாலைவே ள்வி, 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 1:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.