திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கொட்டை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2018 10:05
மேலுார் திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர். மேலுார் நுழைவாயிலில் தாசில்தார் சரவணனுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. இது மாம்பழ சீசன் என்பதால் மேலுார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் விழாவில் மாம்பழங்களை சூறை விடுவதால் மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. மே 26 திருக்கல்யாணம், மே 27 தேரோட்டம் நடக்கிறது.