மேட்டுப்பாளையம்: மழை வேண்டி காரமடை அருகேயுள்ள, ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மலர் அலங்கார பூஜை நட ந்தது. காரமடை அருகே மருதுாரில் அனுமந்தராயசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் சனிக்கிழமையில் சிறப்பு பூஜை நடைபெறும். காலையில் சுதர்சனேஹாமம் பூஜை செய்யப்பட்டது. வை காசி மாத முதல் சனிக்கிழமை விழாவும், 13ம் ஆண்டு விழாவும் நட ந்தது. விழாவில் மழை வேண்டி ஜெ யமங்கள ஆஞ்சநேயருக்கு, பலவகைமலர்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.