திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் வைகாசி விசாகவிழா மே19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினசரி இரவில் சுவாமிகள் வீதி உலா நடக்கிறது. நேற்று காலை 7:00 சிவகாமி அம்மன் ஆதி திருத்தளிநாதர் கோயிலில் தவத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து திருத்தளிநாதர், அம்பாளை அழைத்து வந்து திருத்தளிநாதர் கோயில் திருநாள் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கணபதி பூஜை துவங்கியது. பின்னர் திருமாங்கல்யத்திற்கு காப்புக்கட்டுதல் நடந்தது. தொடர்ந்துதேவஸ்தான ஆதினகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் காலை 10:07 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. மே 26ல் காலை 7:00 மணிக்கு நடராஜர் வீதி உலாவும், மே 27 ல் தேரோட்டமும், மே 28 ல் தெப்பமும் நடக்கிறது.