Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் திருத்தளிநாதர் ... அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவிலில் தேர்த் திருவிழா அஞ்சாஞ்சேரி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நுாற்றாண்டு நடுகற்கள்: திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
16ம் நுாற்றாண்டு நடுகற்கள்: திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

24 மே
2018
11:05

திருப்பூர்: திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம், பல்லடம் - உடுமலை ரோட்டிலுள்ள, செஞ்சேரிபுத்துார் வடுகபாளையத்தில், அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய, மூன்று, நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த இயக்குனர் ரவிக்குமார், பொன்னுசாமி, யுகன் ஆதித் ஆகியோர் நடத்திய கள ஆய்வில் இந்த நடுகற்கள் பற்றி தெரியவந்தது.

இது குறித்து, ரவிக்குமார் கூறியதாவது: நாயக்கர் காலத்தை சேர்ந்த மூன்று நடுகற்கள், ஒரே இடத்தில், குளத்தின் கரையில் அமைந்துள்ளன. 2,500 ஆண்டுக்கு முன், தமிழர் வாழ்வியல் இனக்குழு முறையாகவும், பெருஞ்செல்வமாக கால்நடைகளும் இருந்தன. விலங்குகள், திருடர்களிடமிருந்து, தங்கள் இனக்குழுவை, செல்வத்தை காக்கும் வீரர்களுக்கு நடுகல் அமைத்து, வழிபட்டனர். அந்த வகையில், இங்கு மூன்று நடுகற்கள், ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் உள்ளன. முதல் நடுகல் வீரன், புல்லாங்குழல் இசைக்கும் வகையிலும், அதை மாடு ரசித்தபடியும், இரண்டாவது நடுகல் வீரன், வலது கையில் ஈட்டியும், இடது கையில், மாட்டின் கொம்புகளையும் பிடித்தபடி அமைந்துள்ளது. மூன்றாவது நடுகல்லில், வீரன் இறந்து, சிவலிங்கத்தை வழிபாடு செய்வது போலவும், இடது புறம் உடன் உறவாக மாடு இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று சிற்பங்களிலுள்ள வீரர்களும், காது, கழுத்துகளில் சிறந்த வேலைப்பாடுகளுடன் கூடிய, அணிகலன்கள் அணிந்துள்ளனர். கை, கால்களில் வீரக்காப்பு உள்ளது. சிகை இடது புறம் சாய்ந்தும் காணப்படுகிறது. ஒரே இடத்தில் மூன்று நடுகற்கள் இருப்பதும், தமிழக சிற்பக்கலைக்கு கட்டியம் கூறுகிறது. காற்றில் பறக்கும் ஆடை, அணிகலன்கள் என, வீரர்களின் ஒவ்வொரு அங்கங்களும் தெளிவாக, ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் உள்ளபடியும் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ரவிக்குமார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar