சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தான ஆளுகைக்குட்பட்ட கோயிலின் வைகாசி விசாகத்திருவிழா மே 20ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருகிறார். நேற்று மாலை 6:30 மணிக்கு சிங்கம்புணரி நாட்டார்கள் முன்னிலையில் பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. மே 26 ம் தேதி கழுவன் திருவிழாவும், மே 28ல் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான மே 29ல் பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.