தேனாரி மத்தியாரணிய மகா சிவாலய கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2018 02:05
பாலக்காடு : தேனாரி மத்தியாரணிய மகா சிவாலயம் திரவிய கலசம் அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றன. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி அருகேயுள்ள தேனாரி எனும் சிறு ஊரில் உள்ளது தேனாரி மத்தியாரணிய மகா சிவாலயம். தமிழ் மலையாள கலாச்சாரத்தின் சங்கம பூமியான இப்பகுதி த்ரேதாயுகத்தில் பரசுராமரால் பிதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவாலயங்களில் 54வது சிவாலயம் இத்திருக்கோவில்.
அக்காலத்தில் வனத்தின் மத்தியில் பிரதிஷ்டை செய்ததனால் மத்தியாரணீஸ்வர் என்று பெயர் பெற்றது. நுாற்றாண்டு முன்பு வரை திருவிழாக்களும் பண்டிகைகளும் மிகச்சிறப்பாக நடந்து வந்ததாக காலத்தில் அழிக்க முடியாத சரித்திர பேழையில் இருந்ததாகவும் முன்னோர்கள் கூறினார்கள். பிறகு அக்கோவில் கவனிப்பாறற்று மழையிலும் காற்றிலும் சிறிது சிறிதாக அழிந்து விட்டது. ஆனால், அதனுள் காலத்தால் அழிக்க முடியாத சிவ பிரதிஷ்டை மட்டும் பிரகாச ஒலி வீசிக் கொண்டிருந்தது. திருக்கோவில்களின் கீழுள்ள 32 தேச மக்கள் ஒன்று கூடி முன்வந்து ஸ்ரீ கோவிலை புதுப்பித்தார்கள். 2005 மே மாதம் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. இக்கோவிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் விளம்பி வருடம் வைகாசி மாதம் 7ம் தேதி (மே 21) துவங்கின. இறுதி நாளான நேற்று (25ம் தேதி) பெரும்பாவூர் சாந்தமூட்டம் இல்லத்து வாசுதேவன் நம்பூதிரின் தலைமையில் தாந்திரிக முறைப்படி பெரியமன் பிரமோத குஞ்ச சிவாலய மேல்சாந்தி கிருஷ்ண பிரசாத் ஆகியோரால் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி நடை திறப்புடன் கோவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதிவாச ஹோமம், விடத்ல் பூஜை, பிரகிவுட பூஜை ஆகியவை நடைபெற்றத்தையொட்டி காலை 8.15 மணிக்கு நடந்த பிரதிஷ்டா கலசாபிஷேகம் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தன. தொடர்ந்து உச்சி பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. ராமானந்த மூர்த்தி சுவாமிகள் மகா அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.