சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோயில் வைகாசி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் வைகாசி பிரமோற்ஸவ விழா மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் விஸ்வநாதர், அம்பாளுடன் தினமும் பல்வேறு வாகனங்களில் உலா வந்தார். மே 23நள்ளிரவில் திருக்கல்யாணம் நடந்தது. அன்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (மே25)ல் காலை 9:00 மணிக்கு துவங்கியது. தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.சுவாமி, விசாலாட்சி அம்பாள், பிரியாவிடையுடன் காட்சி அளித்தார்.
பட்டர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் சுமதி, அலுவலர் முருகன் உட்பட பலர் பங்கேற் றனர். ஏற்பாடுகளை தி மேத்தா இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.