கொங்குமண்டலத்தில் சீனாபுரம் எனுமிடத்திலுள்ள அறுபதடி <உயரக்குன்றில், முருகன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். 60 படிக்கட்டுகள் கொண்ட கோயில். இங்கு அருகருகே ஆறுமலைகளில் முருகன் அருள் புரிவதால் இதை ஆறுபடை வீடுகளாக கருதி வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரேநாளில் காலையில் சென்னிமலை முருகன், முற்பகலில் சிவன்மலை முருகன், உச்சிவேளையில் கைத்தமலை வேலவன், மாலையில் அருள்மலை அழகன், அஸ்தமன சந்தியில் சீனாமலை முருகன், அர்த்தசாமத்தில் திண்டல் மலை வேலாயுதன் என வழிபடுவார்கள். இப்படி வழிபட்டால் நிறைந்த செல்வம், நீண்ட ஆயுள், நோயுற்ற வாழ்வு, பேரின்பம் ஆகியவற்றை முருகப்பெருமான் அருள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இருந்து 5 கி.மீட்டரில் உள்ளது சீனாபுரம்.