நாயகம் தவறு செய்தவர்களைக் கூட, அவர்கள் திருந்தும் வகையில் மன்னித்து விடும் குணம் கொண்டவர். அவர் எதிரிகளிடமும் பகைமை காட்டாமல், முகத்தையே காட்டினார். ஒரு சமயம் நாயகத்தை கொலை செய்வதற்காக எதிரிகள் சூழ்ச்சி செய்தனர். இதையறிந்த நாயகம், மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பினார். எதிரிகள், நாயகத்தை பிடிப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என அறிவித்தனர். அதைப் பெற வேண்டும் என விரும்பிய, சுராக்கா என்பவன், நாயகம் ஒளிந்திருந்த இடத்தை கண்டு பிடித்து அங்கு சென்றான். அங்கு தோழர் அபூபக்கருடன் பேசிக் கொண்டிருந்தார் நாயகம். அப்போது அபூபக்கர் பயந்த நிலையில் இருந்தார். அந்நிலையில் நாயகம், “இறைவன் நம்முடன் இருக்கிறார். அபூபக்கரே! நீங்கள் பயப்பட வேண்டாம்”என்றார். அதன் பின் இருவரும் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பலனாக, சுராக்கா சென்ற குதிரை, அந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் திணறியது. பயந்து போன சுராக்கா நாயகத்திடம் சரணடைய, அவரும் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பகைவனையும் நண்பனாக ஏற்கும் பக்குவம் நாயகத்திற்கு மட்டுமே உண்டு.