* கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள். * உலகம் ஒரு போர்க்களம். அதனால் விளைவு குறித்து வருந்தாதே. இன்ப துன்பம், லாபநஷ்டம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் சமமாக கருது. * மனம் வெளிப்புறமாகச் சென்றால் அது தீமையின் பக்கம் அழைத்துச் செல்லும். உனக்குள்ளேயே திருப்பினால், அது கடவுளின் பக்கம் செல்லும். * கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். உன்னால் நியாயத்தின் பக்கம் நிற்க முடியும். * கடவுள் மீது அன்பு செலுத்தினால் அவருடைய சாயலாக மாறுவாய், அவரைப் போலவே y´மை, மகிமை மிக்கவனாக இருப்பாய். * தெய்வ நிலைக்கு உயர்த்துவது பக்தி. இதை விடச் சிறந்ததும், எளிதாகப் பின்பற்றக் கூடியது வேறில்லை. *தன்னலமற்ற இறைத் தொண்டே வாழ்வின் லட்சியம். * சமயச்சடங்குகள், வழிபாட்டு முறைகளை விட கடவுளை அடைவதற்கு தொண்டே சிறந்த வழி. * நியாயம், தர்மம், ஒழுக்கமுடன் வாழ சிறந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படி. அதன் வழிமுறைகளை பின்பற்று. * உன் மதிப்பு குறித்து உன்னை அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள். உன்னை நீயே பெரியவனாக எண்ணினால், அது வெறும் கற்பனையே. - கேட்கிறார் ராமகிருஷ்ணானந்தர்