நம்மை விட வயதில் மூத்தவர்கள் வந்தால், அவர்களை வணங்கி (நமஸ்காரம்) செய்து வரவேற்பது இயல்பு. ஆனால், இவ்வாறு வணக்கம் சொல்வதற்கு வயது வரம்பு இருக்கிறது. நம்மை விட மூன்று வயது அதிகமானவர்களுக்கே வணக்கம் தெரிவித்து வரவேற்கலாம். அண்ணன், அக்காவுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தாது. அவர்கள் நம்மை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் நமஸ்காரம் சொல்லலாம்.