காரியாபட்டி: காரியாபட்டி முக்குரோடு மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். முளைப்பாரி கரைக்க பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.