திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில் நடந்த, வைகாசி மாத கிருத்திகை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, மாதம் தோறும் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல, நேற்று தை மாத கிருத்திகை விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதில், கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனை களும் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. விழாவை யொட்டி, மாடவீதிகளில் சுவாமியின் திருவீதியுலா நடந்தது.