ஸ்ரீவி., பெரியாழ்வார் சன்னயில் ஆனி சுவாதி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2018 11:06
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்திரர் கோயில் பெரியாழ்வார் சன்னயில் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் பெயாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்தரசயனார் கோயிலில், பெரியாழ்வார் ஆனி சுவாதி விழா, இன்று (ஜூன் 14) கொடியேற்றதுடன் தொடங்கியது. இன்று காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் சன்னதியில் கொடியேற்றம் நடைபெற்றது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலா நடக் கிறது. ஒன்பதாம் நாளான ஜூன் 22 அன்று காலை 6:00 மணிக்குமேல், பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்கின்றனர்.