பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
12:06
ஒரு ரம்ஜான் பண்டிகை நாளில் மக்கள் குடும்பம் குடும்பமாக தொழுகை செய்வதற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அநாதைச் சிறுவன் மட்டும் கண்களில் கண்ணீர் ததும்ப, கடந்து செல்லும் மக்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்கவோ, உணவு வழங்கவோ யாருமில்லை.
நபிகள் நாயகத்தின் அருட் பார்வை சிறுவன் மீது விழுந்தது. அவனை அழைத்து அன்புடன் விசாரித்தார். அவன் தனது நிலையை நாயகத்திடம் சொல்லி அழுதான். நாயகம் அவனது நிலை கண்டு கண் கலங்கினார். உடனே, அவனை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ‘‘தம்பி, இனி நீ அழத்தேவையில்லை. ஆயிஷா தான் உனக்கு தாய். பாத்திமா உன் சகோதரி’’ என்றார். சிறுவனுக்கோ என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஆயிஷா அம்மையார் அந்த சிறுவனை வாரி அணைத்துக் கொண்டார். அவனுக்கு புத்தாடை அணிவித்து பலகாரங்கள் கொடுத்தார். அவன் நாயகத்தின் திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டு தொழுகைக்குச் சென்றான்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:45மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.