பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
12:06
காஞ்சிபுரம்:பார்க்கிங் வசதிஇல்லாததால், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மாட வீதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காஞ்சி காமாட்சியம்மன்கோவில், அம்மனின், 51 சக்தி பீடங்களில்,காமகோடி சக்திபீடமாக விளங்குகிறது. இத்தல காமாட்சி அம்மனை, வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார்.தங்க விமானத்தின்கீழே அமர்ந்த கோலத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உள்ளூர், வெளியூர்களில் இருந்து, தினமும்ஆயிரக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெள்ளி, பவுர்ணமி,அமாவாசை, முகூர்த்தம்மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள்கூட்டம் அலைமோதுகிறது.வெளியூர்களில் இருந்து, கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க்கிங் செய்ய, கோவில் அருகில் போதுமான இடவசதி இல்லை. இதனால், கோவிலைச்சுற்றியுள்ள மாடவீதிகளில் இருபுறமும், வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டுசெல்கின்றனர்.இதனால், இப்பகுதியில் மற்ற வாகனங்கள்செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு, அடிக்கடிபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு தனி இடம் ஒதுக்குவதோடு, வாகனங்களை ஒழுங்குபடுத்தநடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.