கன்னிவாடி, கசவனம்பட்டி அருகே குரும்பபட்டியில், காளியம்மன், பகவதியம்மன், மதுரைவீரன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், சுவாமி அழைப்பு, மலர் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வாணவேடிக்கை, ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.