கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) மழலைக்குரல் கேட்கும்
பதிவு செய்த நாள்
14
ஜூன் 2018 05:06
குடும்பநலனை உயிராக மதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
குரு, சனி, ராகு மாதம் முழுவதும் நற்பலன் தருவர். புதன் ஜூன் 24 க்கு பிறகு நன்மைஅளிப்பார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். எண்ணற்ற ஆடம்பர வசதி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். சனிபகவானால் பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர்.
ராகுவால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். ஜூன் 24 வரை குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அதன் பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுமணத்தம்பதியர் மனம் மகிழ குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. ஜூலை 2,3,4ல் கூடுதல் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜூன் 7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். ஜூன்27,28,29 ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 9,10,11ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும். முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஜூன் 24க்கு பிறகு சீரான வளர்ச்சி உண்டாகும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர். இடமாற்ற பீதி மறையும். சிலர் பதவி உயர்வு காண்பர்.
பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். ஜூலை 5 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன் 25,26ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க் கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு விருப்பம் நிறைவேறும்.
தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் சிறக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். வேலையின்றி இருப்பவர்கள் ஜூன் 24க்கு பிறகு குறைந்த முதலீட்டில் புதிய தொழிலை தொடங்கலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். ஜூன் 30, ஜூலை 1,5,6,7 ல் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். ஜூன் 16,17, ஜூலை 14,15 ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் ஜூலை 5க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நற்பலனை காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். ஜூலை 12,13ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் குரு சிறப்பாக அமைந்து உள்ளதால் கல்வி வளர்ச்சி காண்பர். ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பர். ஜூன் 24க்கு பிறகு விரும்பிய நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் காண்பர். மஞ்சள், எள், கரும்பு, கோதுமை போன்ற பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பால்பண்ணைத் தொழில் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்கள் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜூன் 24க்கு பிறகு கணவன்- மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.
சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபத்தை தரும். குருவால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம்
அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்கும். ஜூன் 18,19,20, ஜூலை 16ல் அனுகூலமான பலன் கிடைக்கும்.
* நல்ல நாள்: ஜூன் 16,17,18,19,20,25,26,27, 28,29, ஜூலை 2,3,4,7,8,14,15,16 * கவன நாள்: ஜூன் 21,22 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 3, 7 நிறம்: மஞ்சள், நீலம்
* பரிகாரம்: ● செவ்வாயன்று முருகனுக்கு பாலபிேஷகம் ● வெள்ளிக்கிழமை ராகுகால துர்க்கை வழிபாடு ● பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய் விளக்கு
|