பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
11:06
சாயல்குடி, சாயல்குடி அருகே கூராங்கோட்டையில் தர்மமுனீஸ்வரர் கோயில் உள்ளது. 2006ல் 62 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கோட்டை விநாயகர், தர்மமுனீஸ்வரர், வீரமாகாளி, கோட்டை கருப்பண்ண சுவாமி உள்ளிட்டபரிவார தெய்வங்களுக்கு நாளை காலை 11:00 மேல் 11:40 மணிக்குள் பிள்ளையார்பட்டி கே. பிச்சை குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று காலை 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.இன்று விசஷே சாந்தி, பூத சுத்தி, வேதிகைகளுடன், பூர்ணாகுதி நடக்க உள்ளது. இரவில் பக்தி இன்னிசை, திருமுறை வேதபாராயணம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளும், அன்னதானமும்நடைபெறும். ஏற்பாடுகளை கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயில் நிர்வாக குழுவினர், கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.