பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
12:06
புதுச்சேரி: திட்டக்குடி புத்தேரி கிராம ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத வரதராஜ பெருமாள் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா இன்று நடக்கிறது. திட்டக்குடி புத்தேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் வரதராஜ பெருமாள், செங்கமலத்தாயார், ஆண்டாள் நாச்சியார், பக்த ஆஞ்சநேயர், மாரியம்மன், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிகளுக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த ஏப்ரம் மாதம் 28ம் தேதி, மண்டல பூஜை தொடங்கியது. இதன் நிறைவு விழா இன்று நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு ஹோமம், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரா தனை நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி அருளை பெருமாறு வரதராஜ பெருமாள் கோவில் ஆலய நிர்வாகிகள், திருப்பணி குழு தலைவர் கோதண்டராமன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.