பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
11:06
வாலாஜாபாத்: வாலாஜாபாத், முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அருந்ததியர் தெருவில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, செல்வ விநாயகர், முனீஸ்வரர், வெள்ளையம்மன், பொம்மி சமேத, மதுரை வீரன், நவக்கிரஹ மூர்த்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேக விழா, 15ம் தேதி காலை, 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 10:20 மணிக்கு மேல தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க, சிவாச்சாரியர்கள் கோவில் கோபுர கலசத்தின் மீது, புனித நீரை ஊற்றி, கும்பாபிேஷகம் நடத்தினர். விழாவில், வாலாஜாபாத் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த மக்கள் முத்தாலம்மனை வணங்கினர்.