உடுமலை:உடுமலை, முத்தையா பிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில், சிவன், அம்மன், விநாயகர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. தொடர்ந்து எரியும் வகையில், அணையா விளக்கு எனப்படும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு பூஜையும் நடந்தது.