சோழபுரம் அருள்மொழிநாதர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2018 06:06
சிவகங்கை: சோழபுரம் அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயிலில் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் ஆனி திருவிழா துவங்கியது. சிவகங்கை அருகே சோழபுரத்தில் பழமையான அறம்வளர்த்த நாயகி அம்பாள், அருள்மொழிநாதர் கோயில் உள்ளது.
இங்கு, பிரதோஷத்தன்று சிவனுக்கும், நந்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் சிவனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோயில் ஆனித்திருவிழா இன்று காலை கொடியேற்றம், காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வருவார். விழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.