பதிவு செய்த நாள்
19
ஜூன்
2018
10:06
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. கோயிலில் உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின்னர் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம்வந்து திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளினார். அங்கு தேவாரம் பாடப்பட்டு, 30 நிமிடங்கள் சுவாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூன் 26வரை ஊஞ்சல் விழா நடக்கும். திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ஜூன் 27 அன்று உச்சிகால பூஜையின்போது மூலவர்கள் சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை, மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் மா, பலா, வாழை படைக்கப்பட்டு பூஜை நடக்கும். இரவு யானை மண்டபத்தில் உற்ஸவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும்.