சிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் மாணிக்கவாசகர் மகா குருபூஜை நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு சிவனடியார்களின் சிவபூஜை வழிபாட்டுடன் துவங்கியது. 9:00 மணிக்கு திருவாசக முற்றோதல் மற்றும் 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.