சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது. இரவு 9:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர், பிரியாவிடை, பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாள் நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று சுவாமி கேடய வாகனத்தில் உலா வந்தார். 5 ம் நாளான ஜூன் 22 ம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும், 8 ம் நாளான ஜூன் 25 ம் தேதி மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். அன்றைய தினம் பூப்பல்லக்கு உற்ஸவமும் நடைபெறும், 9 ம் நாளான ஜூன் 26ம் தேதி தேரோட்டம் நடைபெறும், 10 ம் திருநாளான ஜூன் 27 தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.