ஊருக்குள்ளும், காட்டுக்குள்ளும் இருக்கும் பல கோவில்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், காட்டையே கோவிலாக வணங்குகிறார்கள் மேற்கு வங்காள மாநிலத்தில்... இந்தக்கோவில் திருமாலின் திவ்யதேசங்களில் ஒன்றானநைமிசாரண்யம் ஆகும்.ஒரு சமயம் தவவலிமையில் சிறந்தமுனிவர்கள் எல்லாம் ஒன்றுகூடி 12 ஆண்டுகள் தொடர்ந்து சத்தியவேள்வி செய்ய விரும்பினர். இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்காக நடத்தப்படும் யாகம்இது. அதற்குரிய இடத்தை தேர்வு செய்து தரும்படி பிரம்மனைவேண்டினர். ஒரு தர்ப்பைப்புல்லை சக்கரம் போல் வளைத்து, அந்த வளையத்தை உருட்டி விட்டார் பிரம்மா. அது எங்கு போய் நிற்கிறதோ அங்கேயாகம் செய்யுங்கள் என அருளினார்.அந்த சக்கரம் அலக்நந்தா நதிக்கரையில் நின்றது. அங்கு முனிவர்கள் வேள்வியைச் செய்தனர். ‘நேமி’ என்றால் ‘சக்கரம்’ அல்லது‘வளையம்’ என்று பொருள். ‘ஆரண்யம்’ என்றால் காடு. சக்கரம் நின்ற ஆரண்யம் என்பதால் ‘நேமிச ஆரண்யம்’ என அவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது. பின்னாளில், அது மருவி ‘நைமிசாரண்யம்’ ஆகி விட்டது. வேள்வி செய்த முனிவர்கள், அதன் அவிர்பாகத்தை (பலன்)மகாவிஷ்ணுவிற்கு வழங்கினர். அவ்வேள்வி குண்டத்தில் பெருமாள் எழுந்தருளி,அவிர்பாகத்தை ஏற்று, அவர்களுக்கு முக்தி கொடுத்தார். திவ்யதேசமான இங்கு பெருமாள், இங்கு காடு வடிவத்தில் (ஆரண்ய ஸ்வரூபம்) காட்சி தருகிறார். பக்தர்கள் காட்டையே பெருமாளாக வணங்கி செல்கின்றனர். காடாக இருக்கும் பெருமாளுக்கு ‘தேவராஜன்’ என்பது பெயர். கோல்கட்டாவில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் நைமிசாரண்யம் உள்ளது.