பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
11:06
விருத்தாசலம்: சஷ்டியொட்டி, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், ராஜ அலங்காரத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிேஷகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.