நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் வரும் 22ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு கெடிலம் ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றம் நடந்தது. 17ம் தேதி முதல் தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 18ம் தேதி இரவு 7:00 மணிக்கு திரவுபதியம்மன் அர்ச்சுனன் திருக்கல்யாணம் நடந்தது. 22ம் தேதி காலை விநாயகர், அர்சுனன், திரவுபதியம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனையும்; மாலை 5:30 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.