கடலுார் : திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து உபநாச்சியார் முன்னிலையில் கொடி யேற்றப்பட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து தினமும், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை பல்லாக்கு நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் சேவையும், இரவு ஆனி தங்க கருட வாகன மகோற்சவம் நடக்கிறது. 24ம் தேதி காலை துவாதச ஆராதனை திருவிழாவை முன்னிட்டு திருமஞ்சனமும், மாலை துவாதச ஆராதானம் நடக்கிறது. 25ம் தேதி விடையாத்தி உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, தக்கார் சுபத்ரா, தலைமை எழுத்தர் ஆழ்வார் செய்து வருகின்றனர்.