Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடனபாதேஸ்வரர் கோவிலில் 25ம் தேதி ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களிலும் இனி சமய பாடல் ஒலிக்கும்!
எழுத்தின் அளவு:
பெருமாள் கோவில்களிலும் இனி சமய பாடல் ஒலிக்கும்!

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2018
11:06

சிவ ஆலயங்களில், சமய பாடல்கள் பாட, ஓதுவார்கள் உள்ளது போல, திவ்ய தேசங்களிலும், வைணவ ஆலயங்களிலும், அத்யாபகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக கோவில்களில், சமய பாடல்கள் பாடுவது வழக்கத்தில் உள்ளது. சைவ கோவில்களில், ஓதுவார்களால், திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம் பாடப்படுகிறது.அதேபோல், வைணவ கோவில்களில், அத்யாபகர்களால், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருப்பாவை, பஜனை பாடல்கள், முன்னர் பாடப்பட்டன.


கால மாற்றத்தின் காரணமாக, இக்கோவில்களில், சமய பாடல் குறைந்து போனது, ஆனால், சிவ ஆலயங்களில் மட்டும், ஓதுவார்கள் நியமிக்கப்பட்டு, பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. வைணவ ஆலயங்களில், மார்கழி மாதத்தில், பக்தர்களால் மட்டும், பஜனை பாடல்கள் பாடப்படுகின்றன.இக்குறையை தீர்க்க, வைணவ ஆலயங்களில் சமயப் பாடல்களை பாட, அத்யாபகர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஓதுவார்கள், அத்யாபகர்களை உருவாக்கும் வகையில், பயிற்சி பள்ளி திட்டம், கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது, திவ்ய தேசங்கள், பிரதான வைணவ ஆலயங்களில், சமயப் பாடல்களை பாடுவதற்காக, அத்யாபகர்களை நியமிக்க, அறநிலையத் துறை முடிவு செய்துஉள்ளது.வைணவ கோவில்களில், தினமும் காலை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, நாலாயிர திவ்ய பிரந்தம்; மாலையில், நித்திய அனு சந்தானம் ஆகிய பாடல்கள், அத்யாபகர்களால் பாடப்படும் என, தெரிகிறது. இதன் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, சமயத்தை வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நமது சிறப்பு நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar