திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது.விழா நாட்களில் சுவாமி வலம் வருதல் நடக்கிறது. 27-ம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.