பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
11:06
உடுமலை:குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை அடுத்த, குறிஞ்சேரியில் ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும், 3வது செவ்வாய்க்கிழமை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சுற்றுப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று, பக்தி பாடல்களை பாடி வழிபடுகின்றனர். நேற்று திருவாசகம் முற்றோதல் நடந்தது. அதில், திருவாசகம், நாராயணியம், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை படிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், திருமஞ்சனம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.