ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 72.27 லட்சம் வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் 72 லட்சத்து 27 ஆயிரத்து 307 ரூபாயும், தங்கம் 135 கிராம், வெள்ளி 4 கிலோ 150 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் சிவகங்கை இணை ஆணையர் ஜெகநாதன், கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் பலர் பங்கேற்றனர்.