உத்தமபாளையம், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலிற்கு பிரதோஷ ரிஷப வாகனத்தை, காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அன்பளிப்பாக வழங்கினர். உத்தமபாளையத்தில் முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் உட னுறை ஞானாம்பிகை கோயில். ராகு கேது தனித்தனி சன்னதிகளில் தம்பதி சமேதராக எழுந்தருளி யுள்ளனர். அதற்கான பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பிரதோஷத்தையொட்டி நடக்கும் சிறப்பு, அபிஷேக ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். பிரதோஷ நாளில், கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி வலம் வருவதற்குரிய ரிஷப வாகனத்தை, இக் கோயிலின் காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை வழங்கியுள்ளது. அறக்கட்டளையின் தலைவர் பத்திர எழுத்தர் முருகேசன் கூறுகையில், பிரதோஷ நாட்களில் சுவாமி, கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவதற்குரிய ரிஷப வாகனம், எங்கள் அமைப் பின் சார்பில் அன்பளிப்பாக வழங்கியுள்ளோம். இது ரூ. ஒரு லட்சம் மதிப்பில் செய்யப்பட்டதாகும்,என்றார். என்றார்.