பதிவு செய்த நாள்
21
ஜூன்
2018
12:06
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, ரெட்டித் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை திருநீலகண்டேஸ்வர சுவாமி கோவிலில், பக்தர்கள் பங்களிப்புடன், நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், 19ம் தேதி காலை, 10:30 மணிக்கு, ஆலயசுத்தி, வாஸ்து ஹோமம், வாஸ்துசாந்தி, கோ பூஜை, தினபூஜை, தான்யபூஜை, கும்பலங்காரம், கங்கா பூஜை, பிரவேசபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, காலை, 6:15 மணிக்கு, மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, இதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பின், சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு, சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.