பதிவு செய்த நாள்
22
ஜூன்
2018
05:06
பேரூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கனகசபை மண்டபத்தில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இதையொட்டி காலை நேரத்தில், பேரூர் நடராஜர் சன்னதியில் ஸ்நபன கலச பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, நடராஜர், சிவகாமி அம்பாள், கோமுனி, பட்டிமுனி, சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோருக்கு விேஷச திரவியங்களால் மகா அபிேஷகமும் நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரம் முடிக்கப்பட்டு, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நடராஜ பெருமாள் ஆனந்த தாண்டவ காட்சி கொடுத்தார். இதையடுத்து நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனாருக்கும் மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.