ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2018 10:06
ஸ்ரீவில்லிபுத்துார்,:ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி விழாவினை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று காலை 6:50 மணிக்கு பெரியாழ்வர் சன்னதியிலிருந்து புறப்பட்டு செப்புதேருக்கு எழுந்தருளிய பெரியாழ்வாருக்கு, பாலாஜிபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்து தேரினை இழுத்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.