பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் 8ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூலவர், தாயார் சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8:00 மணி முதல் காலபூஜை, மாலை 4:00 மணிக்கு இரண்டாம் காலபூஜை, மாலை 6:00 மணிக்கு கலசாபிஷேகம், 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகர் மற்றும் மூலவர் அன்னபூரணி உடனுறை தாகம் தீர்த்தபுரீஸ்வரர் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேக விழா நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.