பதிவு செய்த நாள்
25
ஜூன்
2018
11:06
ஆத்தூர்: ஆத்தூர், காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர், காந்தி நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை, 10:00 மணியளவில், பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 4:00 மணியளவில், ஆண்கள், பெண்கள், தீச்சட்டி எடுத்து வந்தும், விமான அலகுகள் உள்ளிட்ட அலகுகள் குத்தி, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். விழாவில், முத்துமாரியம்மன் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
* வாழப்பாடி அருகே, புழுதிக்குட்டை, சந்துமலை பகுதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இன்று, காலை, 10:00 மணியளவில், திரவுபதி அம்மன், விநாயகர், போத்தராஜா ஆகிய சுவாமிகளுக்கு, கும்பாபி?ஷக விழா நடக்கிறது. நேற்று, வசிஷ்ட நதியிலிருந்து கோவில் வரை, பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் சென்றனர்.