* அளவோடு உண்கிற பெண்களுக்கு அழகு நீடிக்கும். * துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் செயல்பட்டால் வெல்வது உறுதி. துணிவு இருந்தால் கடலின் ஆழம் கூட தொடை அளவே. * தாயும் தந்தையும் தான் நமக்கு முதல் கடவுள். * இல்லற வாழ்வே நல்லறமாகும். இல்லற வாழ்வை விட்டு விலகுவது பண்பாளர்களுக்கு ஏற்றதல்ல. * பிறருக்கு கொடுத்து வாழாதவர் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது அர்த்தமற்றதாகும். * பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் அமிர்தம் போன்றவர்கள். * பிச்சை எடுக்கும் அளவிற்கு வறுமை வந்தாலும், தவறான செயல்களில் ஈடுபட கூடாது. * வேதம், ஞான நூல்களை படித்து விட்டு ஒழுக்கமில்லாமல் இருப்பவர்கள் பூமிக்கு பாரமானவர்கள் நம்மை அழிக்கும் நோய் வெளியில் இல்லை, அது பொறாமை என்னும் பெயரில் நமக்குள்ளேயே இருக்கிறது. * நல்ல சொற்களை மட்டுமே கேட்டு, நல்ல சொற்களை மட்டும் பேசி வாழ்வதே கற்பு. * முயற்சி செய்தும் தனக்கு கிடைக்காத பொருளை உடனே மறந்து விட வேண்டும். * குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு நண்பர், உறவினர்களின் ஆதரவு கிடைக்காது. * எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தற்பெருமை பேசுதல் கூடாது. அது திறமையை அழித்துவிடும். * காற்றுடன் தீ சேர்ந்தால் அழிவு அதிகமாகும். அதுபோல கோள் சொல்பவனுடன் அதைக் கேட்பவனும் சேர்ந்தால் தீமை அதிகமாகும். * இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம். * சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும். * கட்டிய கணவனையே பழிதூற்றும் பெண் எமனுக்கு நிகராவாள். * பிறர்க்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து உண்பதே சிறந்தது. * நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு. * மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது. * மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை. * உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக கருத கூடாது. * அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது நல்லது. * சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உங்கள் கையில். * நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும். * உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைத்திருக்கும். * நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவவாழ்வின் அடையாளம். * தூய வெள்ளை மனம் படைத்தவருக்கு தீய சிந்தனைகள் உண்டாவதில்லை.