பிள்ளையார், ஏழை எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி, மஞ்சள் பொடியிலும், களி மண்ணிலும், சாணத்திலும்கூட எவரும் பிள்ளையாரைப் பிடித்துவைத்து வழிபடலாம். அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர், எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து... அது கல்லோ, களி மண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள்செய்வார்.