ராமேசுவரத்துக்குப் போனால் சேதுவில் ‘சமுத்திர பூஜை’ செய்வார்கள். அப்போது, பூஜா அங்கமாக சமுத்திரத்துக்கு அபிஷேகம் பண்ணுவார்கள். அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள். அதேபோல், வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிக்கைக்கு, அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவர அவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.