ஐந்து பிரகாரங்களோடு, கொடி மரம், கோபுரம் கூட ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்த தலம் விருத்தாச்சலம். காசியை விட வீசம்பங்கு அதிகம் என்று இதன் பெருமை பற்றி சொல்வார்கள். சுந்தரர், இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, திருவாரூரில் மீண்டும் பெற்றதாகச் சொல்வர். இங்கிருந்த பஞ்சவர்ண பிரகாரம் 18ம் நுõற்றாண்டில் அந்நியப் படையெடுப்பில் அழிந்தது. பின், ஆங்கிலேயரின் வசமிருந்த இப்பகுதிக்கு1803ல், ஆங்கிலக் கலெக்டராக கார்ரோ என்பவர் இருந்தார். அவர் காலத்தில் கோயில் மதிலைச் சுற்றியிருந்த அகழி துõர்வாரப் பட்டு சீரமைத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். 1813 முதல் 1826 வரை ஆட்சி செய்த கலெக்டர் சார்லஸ் ஹைட், இங்குள்ள கைலாச பிரகாரத்திற்கு தளவரிசை போட்டதோடு, ஆரத்திக்கான வெள்ளிகும்பம், தேர்சங்கிலி வாங்கிக் கொடுத்தார்.