ராமர் சீதையைத் தேடி அலைந்தபோது, “ ஏ! மரமே! சீதையைக் கண்டாயா? நதியே! நீயாவது பார்த்தால் சொல்லேன்!” என்று இயற்கையிடம் கூட தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். சீதையும், பத்து மாதம் அசோகவனத்தில் சிறையில் இருந்து வருந்தினாள். தான் பட்ட கஷ்டத்தை விட, தன் மனைவி பட்ட கஷ்டத்தை ராமனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால், கிருஷ்ணாவதாரம் எடுத்த போது அவரது பெற்றோரை சிறையில் இருக்க வைத்தார். சிறையிலேயே பிறந்தார். முந்தைய அவதாரத்தில் மனைவி பட்ட கஷ்டத்தில் ஒரு பகுதியாவது பட்டு விட வேண்டும் என்று ஆசை கொண்டார்.